தில்லியில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தில்லி முதல்வர், ஆளுநருடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
தில்லியில் தற்போதைய நிலவரப்படி இதுவரை 38,958 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,271 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.