புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை இரண்டையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டது: ராகுல் காந்தி

கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

News image

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

Updated On :24 ஜூன் 2020, 9:16 am

DIN

கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. 

பொது முடக்க காலத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு வரைபடம் ஒன்றை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை உயர்வு ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டது. நாட்டில் கரோனா பாதிப்பு, பெட்ரோல்- டீசல் விலை இரண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதை ஒரு வரைபடம் மூலமாக குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.