அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பொதுமுடக்கம் முடிந்தாலும் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி

பொதுமுடக்கம் முடிவடைந்தாலும் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

News image
பிரதமர் நரேந்திர மோடி
Updated On :28 ஜூன் 2020, 6:41 am

DIN

பொதுமுடக்கம் முடிவடைந்தாலும் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 'மனதின் குரல்' வானொலி உரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 

பொதுமுடக்கம் முடிவடைந்தாலும் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும். முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி மிக அவசியம். முகக்கவசம் அணியவில்லை என்றால், நீங்களும் உங்களை சுற்றியுள்ளவர்களும் ஆபத்தில் இருக்கிறீர்கள். எனவே, கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று அனைத்து நாட்டு மக்களிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரது ஊக்கமளிக்கும் கதைகளை நாம் கேட்டிருப்போம். உ.பி.யின் பராபங்கியில், வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் தனிமைப்படுத்தலின்போது, கல்யாணி ஆற்றின் பழைய இயற்கை நிலைமையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தனிமைப்படுத்தலில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை மாற்றியமைக்க முற்படுவது பாராட்டத்தக்கது.

பீகாரைச் சேர்ந்த தியாகி குண்டன்குமாரின் தந்தை, எல்லைத் தாக்குதலில் தனது மகனை இழந்த நிலையில், நாட்டைப் பாதுகாப்பதற்காக தனது பேரன்களையும் ஆயுதப் படைகளுக்கு அனுப்புவேன் என்று கூறியுள்ளார். நாட்டின் பாதுக்கப்புக்காக பணியாற்றும் ஒவ்வொரு வீரருடைய குடும்பத்தினரின் எண்ணமும் இதுவாகத் தான் இருக்கிறது. அவர்களின் தியாகத்துக்கு தலை வணங்குகிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.