ராஜஸ்தானில் மாட்டிறைச்சி விற்பனை செய்ததாக கூறி 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராஜஸ்தானின் ஜதியானா கிராமத்தில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் ஒரு வீட்டில் இருந்து மாட்டிறைச்சி, சிறிய கத்தி மற்றும் இறைச்சி வெட்டும் பலகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அத்துடன் இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.