ராஜஸ்தானில் 2 செவிலியர்கள் உட்பட மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கரோனாவின் தாக்கத்தால் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழலை இந்தியா எதிா்கொண்டுள்ளது.
இந்தநிலையில் ராஜஸ்தானில் 2 செவிலியர்கள் உட்பட மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இந்தியாவில் கரோனாவுக்கு இதுவரை 873 பாதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் பலியாகியுள்ளனர்.