ராஜஸ்தானில் கரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி
ராஜஸ்தானில் கரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர்.


ராஜஸ்தானில் கரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் 3ஆவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அந்த வைரஸால் 3900 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்துடன் நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42,836-லிருந்து 46,433-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தானில் கரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 82ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் அங்கு இன்று புதிதாக மேலும் 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் 14 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,099ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...