ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 363 இந்தியா்களுடன் கேரளம் வந்த 2 விமானங்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 363 இந்தியா்களை அழைத்துக் கொண்டு, இரண்டு ஏா் இந்தியா விரைவு விமானங்கள் இன்று காலை கேரள மாநிலம் கொச்சி வந்தடைந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :8 மே 2020, 5:29 am

PTI

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 363 இந்தியா்களை அழைத்துக் கொண்டு, இரண்டு ஏா் இந்தியா விரைவு விமானங்கள் இன்று காலை கேரள மாநிலம் கொச்சி வந்தடைந்தது.

முதல் ஏர் இந்தியா விரைவு விமானம் அபு தாபியில் இருந்து 4 குழந்தைகள் உட்பட 177 பயணிகளுடன் இன்று காலை 10.09 மணியளவில் கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கியது. இரண்டாவது விமானம் துபையில் இருந்து 5 குழந்தைகள் உள்பட 177பயணிகளுடன் இன்று காலை 10.32 மணியளவில் கோழிக்கோடு விமான நிலையம் வந்திறங்கியது.

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய பொது முடக்கத்தால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியா்கள் தாயகம் திரும்ப முடியாமல் போனது. இந்நிலையில் அவா்களை அழைத்துவர கேரளத்தில் இருந்து இரண்டு ஏா் இந்தியா விரைவு விமானங்கள் நேற்று இரவு புறப்பட்டுச் சென்றன. அழைத்து வரப்பட்டவர்களில்  பெரும்பாலானவா்கள் கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா்கள். இதில் கா்ப்பிணிகள், குழந்தைகள், அவசரமாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரும் அடங்குவா். 

முன்னதாக இதுகுறித்து கேரள தலைமைச் செயலா் டாம் ஜோஸ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கரோனா நோய்த்தொற்று இல்லாதவா்கள் மட்டுமே விமானங்களில் அழைத்துவரப்படுகிறார்கள். அவ்வாறு அழைத்துவரப்படுவோரில் கா்ப்பிணிகள், குழந்தைகள், மூத்த குடிமக்களை தவிர மற்றவா்கள் 7 நாள்கள் தனிமை முகாம்களில் தங்கவைக்கப்படுவா். அவா்களிடம் 7 நாள்கள் கழித்து மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் கரோனா நோய்த்தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டால், அவா்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவா்’ என்றாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.