மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜஸ்தானில் மேலும் 70 பேருக்கு கரோனா உறுதி: மொத்த பாதிப்பு 7,100

ராஜஸ்தானில் கரோனா தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 7,100 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :25 மே 2020, 6:38 am

PTI

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கரோனா தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 7,100 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

திங்கள்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை இந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 7,100 ஆகவும், பலி எண்ணிக்கை 163 ஆகவும் உயர்ந்துள்ளது என்று சுகாதார கூடுதல் தலைமைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார்.

70 புதிய வழக்குகளில், பாலி 25 வழக்குகளையும், சிகாரில் 22, ஜெய்ப்பூரில் 11, கோட்டாவில் ஏழு, ஆல்வாரில் ஐந்து, தோல்பூர் மற்றும் ஸ்வாய் மாதோபூரில் தலா ஒரு வழக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மொத்தம் இதுவரை 3,856 நோயாளிகள் குணமடைந்து, அதில் 3,420 பேர் வெளியேற்றப் பட்டுள்ளனர். தற்போது வரை மாநிலத்தில் 3,081 வழக்குகள் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 

கரோனா பாதிப்புகளில் அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் 78 இறப்புகளும், 1,826 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜோத்பூரில் 1,224 வழக்குகளும் 24 இறப்புகளும் பதிவாகியுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்தோர் 1,701 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.