தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கரோனா தொற்று: பிற மாநிலங்கள் நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பிற மாநிலங்களில் பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :28 மே 2020, 4:16 pm

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பிற மாநிலங்களில் பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் இரவு 8.30 மணி நிலவரப்படி, புதிதாக 251 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 8,067 ஆக உயர்ந்துள்ளது.

தெலங்கானா:

தெலங்கானாவில் புதிதாக 66 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,908 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 67 ஆக உள்ளது.

குஜராத்:

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 367 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 22 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 15,572 ஆகவும், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 960 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஹரியாணா:

ஹரியாணாவில் புதிதாக 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,504 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 604 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

ஜம்மு காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீரில் புதிதாக 115 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜம்முவிலிருந்து 14 பேர், காஷ்மீரிலிருந்து 101 பேர். மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,036 ஆக உள்ளது. 1,150 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தரகண்ட்:

உத்தரகண்டில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 344 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 4,536 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 229 பேர் பலியாகியுள்ளனர். 

ஹிமாச்சலப் பிரதேசம்:

ஹிமாச்சலப் பிரதேசத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது. 205 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.