ஜவாஹர்லால் நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் ராகுல் மரியாதை
ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி தில்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி தில்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாள் நாடு முழுவதும் குழந்தைகள் நாளாக இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
நேருவின் பிறந்தநாளையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி நேருவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நேருவின் பிறந்தநாளையொட்டி சுட்டுரையில் பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, ''இந்தியா இன்று தனது முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளை கொண்டாடுகிறது.
சகோதரத்துவம், சமத்துவவாதம் மற்றும் நவீன கண்ணோட்டத்தின் மதிப்புகளுடன் நாட்டின் அடித்தளத்தை அமைத்த உயர்ந்த தொலைநோக்கு பார்வையாளர் நேரு. அவர் உருவாக்கிய இந்த மதிப்புகளைப் பாதுகாப்பதே எங்கள் முயற்சி'' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...