மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உறவினர்களாலேயே 98% பாலியல் வன்கொடுமை: தில்லி காவல்துறை

தில்லியில் உறவினர் அல்லது ஏற்கெனவே அறிமுகமான நபர்களாலேயே 98 சதவிகித பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தில்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
உறவினர்களாலேயே 98% பாலியல் வன்கொடுமை: தில்லி காவல்துறை (கோப்புப்படம்)
Updated On :18 நவம்பர் 2020, 2:14 pm

DIN

தில்லி: நாட்டின் தலைநகரான தில்லியில் உறவினர் அல்லது ஏற்கெனவே அறிமுகமானவர்களாலேயே 98 சதவிகித பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தில்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா தலைமையில் உள்துறையின்  நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தில்லி காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையிலான உறவு குறித்து காவல்துறை சார்பில் விளக்கவுரை அளிக்கப்பட்டது.

அதில் தில்லியில் 44 சதவிகித பாலியல் வன்கொடுமைகள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினராலேயே அல்லது குடும்ப நண்பர்களாலேயே நடந்துள்ளது. 13 சதவிகித பாலியல் வன்கொடுமைகள் உறவினர்களாலும், 12 சதவிகித பாலியல் வன்கொடுமைகள் அண்டை வீட்டினரால் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

மேலும், 26 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவதொருவகையில் அறிமுகமானவர்களாகவே இருக்கின்றனர். 3 சதவிகிதத்தினர் முதலாளி மற்றும் உடன் பணிபுரியும் நபர்களால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 2 சதவிகிதத்தினர் மட்டுமே அறிமுகமற்ற நபர்களால் வன்கொடுமைக்கு ஆளாப்படுகின்றனர் என்றும் தெரிவித்தனர்.

கூட்டத்தின் போது, பாலின உணர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல், வன்கொடுமைகளைத் தடுக்க விழிப்புணர்வு பிரசாரங்களைத் தொடங்குவது போன்ற பல நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.