மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செயலி மூலம் 67% சுற்றுச்சூழல் மாசுபாடு புகார்கள்: தில்லி சுகாதாரத்துறை

பசுமை தில்லி (கிரீன் தில்லி) செயலி மூலம் இதுவரை 67 சதவிகித சுற்றுச்சூழல் மாசுபாடு புகார்கள் பதிவாகியுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

News image
செயலி மூலம் 67% சுற்றுச்சூழல் மாசுபாடு புகார்கள்: தில்லி சுகாதாரத்துறை (கோப்புப்படம்)
Updated On :19 நவம்பர் 2020, 11:20 am

DIN

பசுமை தில்லி (கிரீன் தில்லி) செயலி மூலம் இதுவரை 67 சதவிகித சுற்றுச்சூழல் மாசுபாடு புகார்கள் பதிவாகியுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் தில்லி அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பொதுமக்கள் நேரடியாக அரசுக்கு புகாரளிக்கும் வகையில் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி பசுமை தில்லி (கிரீன் தில்லி) என்ற செயலியை தில்லி அரசு அறிமுகம் செய்தது.

இதில் இதுவரை 6,963 புகார்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 4,761 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, வடக்கு தில்லி மாநகராட்சி பகுதியில் அதிக அளவிலான சுற்றுச்சூழல் மாசுபாடு புகார்கள் பதிவாகியுள்ளன. புகாரில் அதிக அளவாக குப்பைக் கொட்டுதல், பிளாஸ்டிக் பொருள்களை எரித்தல் போன்ற புகார்கள் அதிக அளவில் பதிவாகியுள்ளன.

செயலியில் வரும் புகார்கள் அனைத்தும் தலைமைச் செயலகத்தில் உள்ள சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையத்தின் உதவியுடன் அந்தந்த துறையைச் சேர்ந்த மண்டல அதிகாரிகள் மூலம் சரிசெய்யப்படுகின்றன.

தில்லி தலைமைச் செயலகத்தில் மூத்த விஞ்ஞானி மோகன் ஜார்ஜ் மற்றும் பி.எல். சாவ்லா தலைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 10 பேர் அடங்கிய குழு சுற்றுச்சூழல் மாசு மற்றும் கட்டுப்பாடு குறித்து கண்காணித்து வருகிறது. மேலும் பசுமை தில்லி செயலியில் வரும் புகார்களையும் கண்காணித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.