மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் கரோனா படுக்கை வசதி அதிகரிக்கப்படும்: கேஜரிவால் உறுதி

தில்லி மருத்துவமனையில் கரோனா  தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உறுதியளித்துள்ளார்.

News image
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
Updated On :19 நவம்பர் 2020, 1:18 pm

DIN

தில்லி மருத்துவமனையில் கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உறுதியளித்துள்ளார்.

தில்லியில் கரோனா வைரஸ் தொற்று மூன்றாவது முறையாக மீண்டும் அதிக அளவில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் முதல்வர் கேஜரிவால் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை மேற்கொண்டார்.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கேஜரிவால் நேரில் பார்வையிட்டார்.

தில்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால், மருத்துவமனைகளில் வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்து வருவதாகக் கூறினார்.

மேலும், தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் கூடுதலாக 50 முதல் 100 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.