மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,760 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்:
புதிதாக 5,760 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,74,455 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,088 பேர் குணமடைந்துள்ளனர், 62 பேர் பலியாகியுள்ளனர். 16,47,004 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 46,573 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலையில் 79,873 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை:
மும்பையில் மேலும் 1,092 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 1,053 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 17 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,74,572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,51,509 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 10,654 பேர் பலியாகியுள்ளனர். 9,325 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.