தில்லியில் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் ஆர்டி - பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கையை 37,200 ஆக அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஐசிஎம்ஆர்-ஐ அறிவுறுத்தியுள்ளது.
இதுபற்றி உள்துறை அமைச்சகத்தின் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின்படி, தில்லியில் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் ஆர்டி - பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கையை ஐசிஎம்ஆர் ஒருநாளைக்கு 27,000-இல் இருந்து 37,200 ஆக உயர்த்தியுள்ளது. நவம்பர் 15-ம் தேதி 12,055 ஆர்டி - பிசிஆர் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 19-ம் தேதி 30,735 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன."
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது தில்லியில்தான். தில்லியில் 6,608 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கை 40,936 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 5,17,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,68,143 பேர் குணமடைந்துள்ளனர். 8,159 பேர் பலியாகியுள்ளனர்.
இதனிடையே 13 கோடி கரோனா பரிசோதனைகள் என்ற மைல்கல்லை இந்தியா வெள்ளிக்கிழமை எட்டியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பலரது வியர்வைக்குத் துரோகம் செய்யாதீர்கள்..! ஜன நாயகன் குறித்து ஜீவா!

ரிஷப் பந்த் பொறுப்புடன் விளையாட வேண்டும்: முகமது கைஃப்

தேர்தல் 1989: 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் முதல்வர் கருணாநிதி!

தீமா... தீமா... தேறுமா? பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே - திரை விமர்சனம்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


