ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நிவர் புயல்: கர்நாடகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் நிவர் புயலால் கர்நாடக மாநிலத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆயவு மையம் அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :26 நவம்பர் 2020, 8:05 am

DIN

வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் நிவர் புயலால் கர்நாடக மாநிலத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆயவு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை  பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிதீவிர புயலான நிவர் புயல் தமிழகத்தின் வங்கக் கடலோரப் பகுதிகளில் கரையைக் கடந்து வடமேற்கு திசையை நோக்கி தரைப் பகுதியில் நகர்ந்து வருகிறது. இதனால் அதிதீவிரப் புயல் வலுவிழந்து புயலாக மாறியுள்ளது.

எனினும் வடமேற்கு திசையை நோக்கி நகர்வதால் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்த மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பெங்களூருவின் உள்பகுதிகளிலும், கோலார், சிக்கபல்லப்பூர், மாண்டியா, ராம்நகர் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.