மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாயிகளை தில்லிக்குள் அனுமதிக்க வேண்டும்: சத்யேந்திர ஜெயின்

வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட தலைநகரை நோக்கி வரும் விவசாயிகளை தில்லியினுள் அனுமதிக்க வேண்டும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்)
Updated On :29 நவம்பர் 2020, 10:26 am

DIN


வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட தலைநகரை நோக்கி வரும் விவசாயிகளை தில்லியினுள் அனுமதிக்க வேண்டும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

அவர்கள் நம் நாட்டின் விவசாயிகள் என்பதால், விவசாயிகள் விரும்பும் இடத்தில் போராட்டம் நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி ஏராளமான விவசாயிகள் தலைநகரான தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆதரவு தெரிவித்து போராட்டக்காரர்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களுடன் வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர்.

எனினும் அவர்கள் தில்லி எல்லையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தில்லியில் புராரி திடலுக்குச் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் சாலைகளில் விவசாயிகள் உணவு சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையும் இருக்கக்கூடாது. விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும். தில்லியில் விவசாயிகள் விரும்பும் இடத்தில் போராட்டம் நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.