உன்னாவ் பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் காலமானார்

​உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் மகேந்திர சிங் திங்கள்கிழமை காலமானார்.
விபத்தில் காயமடைந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் உயர் சிகிச்சைக்காக தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டபோது..
விபத்தில் காயமடைந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் உயர் சிகிச்சைக்காக தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டபோது..
Published on
Updated on
1 min read


உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் மகேந்திர சிங் திங்கள்கிழமை காலமானார்.

உன்னாவ் பாலியல் வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணும், வழக்கறிஞர் மகேந்திர சிங்கும் கடந்தாண்டு ஜூலை மாதம் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். இருவரும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் 2 மாதங்களில் வீடு திரும்பினார்.

இதையடுத்து வழக்கறிஞர் மகேந்திர சிங், வீட்டிற்கு அனுப்பப்பட்டு முழு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்.

அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கையில், "ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. மாவட்ட மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு உடல் உறுப்புகள் செயல்படாததன் காரணமாக அவர் திங்கள்கிழமை காலமானார்.

அவரது இளைய சகோதரர் பிங்கு தெரிவிக்கையில், "அந்த விபத்திலிருந்து அவர் மீளவே இல்லை" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com