மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி: தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி: தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
Updated On :9 அக்டோபர் 2020, 12:10 pm

DIN

புது தில்லி: வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி காரணமாக தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை துறையின் புயல் எச்சரிக்கை பிரிவு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இன்று (அக். 9) அதிகாலை வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவானது. இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணி அளவில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது.

மத்திய வங்கக் கடலில் காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக இது நாளை (அக்.10) வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஒடிசா, கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராயலசீமா, கர்நாடகத்தின் உள்புற பகுதிகள் மற்றும் மராத்வாடா ஆகிய இடங்களில் ஆங்காங்கே  வரும் 10 அன்று மிக அதிக அளவில் மழையும் பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடலோர ஒடிசா, கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராயலசீமா, கர்நாடகத்தின் உட்புற பகுதிகள், மராத்வாடா மற்றும் விதர்பா ஆகிய இடங்களில் ஆங்காங்கே வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மிக அதிக அளவில் மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 11-ம் தேதி அதிகாலை முதல்  12 -ம் தேதி மதியம் வரை ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும்,  9-ம் தேதி முதலே வானிலை மோசமாக இருக்கக்கூடும் என்பதாலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பும் படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.