மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேளாண் சட்டங்களுக்கு எதிராக அக்.27இல் கூடும் சத்தீஸ்கர் சிறப்பு பேரவைக் கூட்டம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் அக்டோபர் 27ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை
Updated On :21 அக்டோபர் 2020, 2:11 pm

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் அக்டோபர் 27ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் சட்டமன்ற கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு மாநில அரசின் முன்மொழிவை சத்தீஸ்கர் ஆளுநர் அனுசுயா யுகே திருப்பி அனுப்பி இருந்தார். மாநில அரசு அளித்த பதிலைத் தொடர்ந்து ஆளுநர் ஒப்புதல் அளித்து புதன்கிழமை உத்தரவிட்டார்.

இந்நிலையில் சட்டப்பேரவை செயலர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய இரு தேதிகளில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாநில அரசு தீர்மானம் மற்றும் மசோதாக்களை நிறைவேற்றுவமாறு காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பஞ்சாப் மாநில அரசு மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்ட மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.