அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா பாதித்தவர்களில் 2% பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில்

நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 40 லட்சத்தை நெருங்குகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 30 லட்சம் பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

News image
கரோனா பாதித்தவர்களில் 2% பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில்
Updated On :4 செப்டம்பர் 2020, 11:16 am

DIN


புது தில்லி: நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 40 லட்சத்தை நெருங்குகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 30 லட்சம் பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரில் 2% பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில், நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 30 லட்சமாக உள்ளது. 

அதேவேளையில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரில் 0.5%க்கும் குறைவானவர்களே செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை பெறுகிறார்கள். மொத்த கரோனா நோயாளிகளில் 16,545 பேர் ( 2%) மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 28,437 பேர் (3.5%) ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுகிறார்கள் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.