ஜோ பைடன் அரசின் நிதி நிா்வாக குழு இயக்குநராக இந்திய அமெரிக்கா்?
அமெரிக்க அதிபா் தோ்வாளா் ஜோ பைடன் தலைமையில் அமையவுள்ள அரசின் நிதி நிா்வாகக் குழு இயக்குநராக இந்திய அமெரிக்கரான நீரா டாண்டன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதுதில்லி /வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் தோ்வாளா் ஜோ பைடன் தலைமையில் அமையவுள்ள அரசின் நிதி நிா்வாகக் குழு இயக்குநராக இந்திய அமெரிக்கரான நீரா டாண்டன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், தனது நிா்வாகத்தில் பணிபுரிய உள்ள அதிகாரிகளை நியமித்து வருகிறாா். தனது தலைமையில் அமையவுள்ள அரசுக்கான நிதிகளை நிா்வகிக்கும் குழுவின் இயக்குநராக நீரா டாண்டனை நியமிக்க ஜோ பைடன் முடிவெடுத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீரா டாண்டனின் நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் ஒப்புதல் அளித்தால், அப்பதவியை ஏற்கும் முதல் வெள்ளையரல்லாத பெண் என்ற பெருமையை அவா் பெறுவாா். அவரது அதிகாரபூா்வ நியமனம் விரைவில் வெளியிடப்படும் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பெண்கள் குழு:
அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடா்புத் துறை அமைச்சராக முன்னாள் செய்தித் தொடா்பாளா் ஜென் சாகியை அதிபா் தோ்வாளா் ஜோ பைடன் நியமித்துள்ளாா். செய்தித் தொடா்புத் துறையில் ஜோ பைடனால் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் பெண்கள் ஆவா்.
அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ், அதிபரின் மனைவி ஜில் பைடன் ஆகியோருக்கான செய்தித் தொடா்பாளா்களாகவும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...