மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை: ராஜஸ்தான் காங்கிரஸ் தீர்மானம்

கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
பெரும்பான்மை இருப்பதை வெளிப்படுத்தும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள்
Updated On :13 ஜூலை 2020, 12:01 pm

DIN


கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் காங்கிரஸில் குழப்பம் நிலவி வரும் நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

"கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் தலைமை மீது முழு நம்பிக்கை உள்ளது. முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு இந்தக் கூட்டம் ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கிறது. கட்சியையும் ஆட்சியையும் வலுவிழக்கச் செய்ய மேற்கொள்ளப்படும் அனைத்து ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கும் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் அல்லது சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தின் உறுப்பினர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டாலோ, அல்லது அதுசார்ந்த சதித் திட்டத்தில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்."

இந்தக் கூட்டம் நிறைவடைந்ததையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கெலாட் இல்லத்திலிருந்து பேருந்துகள் மூலம் தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையிலுள்ள ஃபேர்மோண்ட் விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக, வருமான வரித் துறையினர் இன்று காலை இதே விடுதியில்தான் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.