பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 5 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.
இதில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்களில் யார் யாருக்கு எவ்வளவு நிதி என்பது குறித்த அறிவிப்புகளை அறிவிக்கிறார். மேலும், நிலம், தொழிலாளர் நலன், பணப்புழக்கம் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகவிருக்கின்றன.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகளுடன் உணவுக் கழகமும் இணைந்து மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.
சர்வதேச அளவிலான இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் மீண்டு வருவோம்.
இந்தியா மிக சிக்கலான ஒரு கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
ரூ. 20.97 லட்சம் கோடி: எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு நிதி?
தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு 5 கட்டங்களாக ரூ.20.97 லட்சம் கோடி ஒதுக்கீடு!
தற்சார்பு இந்தியா திட்டத்தின் இன்றைய 7 முக்கிய அறிவிப்புகள்!
8.19 கோடி விவசாயிகளுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு டிவி சேனல்: நிதியமைச்சர் அறிவிப்பு