மத்திய கலாசாரத் துறை அமைச்சருக்கு கரோனா தொற்று

மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேலுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல்
மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல்

மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேலுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 

நேற்று இரவு என்னுடைய கரோனா பரிசோதனை முடிவுகள் வந்தன. அதில், எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு கவனமாக இருக்கவும் எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com