ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாள்களில் 51 ஆசிரியர்கள், 4 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு

கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாள்களில் 51 ஆசிரியர்கள் மற்றும் 4 மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாள்களில் 51 ஆசிரியர்கள், 4 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு

Updated On :7 ஜனவரி 2021, 5:48 pm IST

கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாள்களில் 51 ஆசிரியர்கள் மற்றும் 4 மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி வருவது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 51 ஆசிரியர்களுக்கும், 4 மாணவர்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கணக்கெடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் மாநிலக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கரோனா பாதித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பள்ளிகள் மூன்று நாள்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.