ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

காதலனின் மனைவிக்கு ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை விட்டுக் கொடுத்த பெண்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் காதலித்த ஆணோடு சேர்ந்து வாழ்வதற்காக ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை அவரது மனைவிக்கு பெண் ஒருவர் விட்டுக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

News image

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் காதலித்த ஆணோடு சேர்ந்து வாழ்வதற்காக ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை அவரது மனைவிக்கு பெண் ஒருவர் விட்டுக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 5:24 pm IST

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் காதலித்த ஆணோடு சேர்ந்து வாழ்வதற்காக ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை அவரது மனைவிக்கு பெண் ஒருவர் விட்டுக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் ஒரு நபருக்கும் (வயது 44), 54 வயதுடைய அவரது சக பெண் ஊழியருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது தீவிரமாகி அந்தப் பெண் அவரோடு சேர்ந்து வாழ விரும்பியுள்ளார். ஆனால் அந்த நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 16 வயதுடைய பெண் உட்பட இரு குழந்தைகள் உள்ளனர். அத்துடன் இவர்களது நட்பிற்கு அந்த ஆணின் மனைவி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு இடையேயான பிரச்சினை முற்றி விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அங்கு சமரச மையத்தில் நடந்த ஆலோசனையில் தனது கணவனை விட்டு விலகுவதற்கு அந்தப் பெண் ஒரு நிபந்தனை விதித்துள்ளார். அதனை ஏற்று குறிப்பிட்ட அந்த காதலி ரூ.ஒன்றரைக் கோடி மதிப்புடைய தனது சொத்துக்களை மனைவியின் பெயரில் மாற்றியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்தப் பெண் தனது கணவனை விட்டு இரு குழந்தைகளுடன் பிரிந்து சென்றுள்ளார்.

இந்த சம்பவம் அங்கே பேசு பொருளாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.