தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

காதலனின் மனைவிக்கு ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை விட்டுக் கொடுத்த பெண்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் காதலித்த ஆணோடு சேர்ந்து வாழ்வதற்காக ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை அவரது மனைவிக்கு பெண் ஒருவர் விட்டுக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

News image

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் காதலித்த ஆணோடு சேர்ந்து வாழ்வதற்காக ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை அவரது மனைவிக்கு பெண் ஒருவர் விட்டுக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 5:24 pm IST

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் காதலித்த ஆணோடு சேர்ந்து வாழ்வதற்காக ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை அவரது மனைவிக்கு பெண் ஒருவர் விட்டுக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் ஒரு நபருக்கும் (வயது 44), 54 வயதுடைய அவரது சக பெண் ஊழியருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது தீவிரமாகி அந்தப் பெண் அவரோடு சேர்ந்து வாழ விரும்பியுள்ளார். ஆனால் அந்த நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 16 வயதுடைய பெண் உட்பட இரு குழந்தைகள் உள்ளனர். அத்துடன் இவர்களது நட்பிற்கு அந்த ஆணின் மனைவி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு இடையேயான பிரச்சினை முற்றி விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அங்கு சமரச மையத்தில் நடந்த ஆலோசனையில் தனது கணவனை விட்டு விலகுவதற்கு அந்தப் பெண் ஒரு நிபந்தனை விதித்துள்ளார். அதனை ஏற்று குறிப்பிட்ட அந்த காதலி ரூ.ஒன்றரைக் கோடி மதிப்புடைய தனது சொத்துக்களை மனைவியின் பெயரில் மாற்றியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்தப் பெண் தனது கணவனை விட்டு இரு குழந்தைகளுடன் பிரிந்து சென்றுள்ளார்.

இந்த சம்பவம் அங்கே பேசு பொருளாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.