தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

வெளிநாட்டு விமான சேவையைநிறுத்த பொதுமக்கள் ஆதரவு: ஆய்வில் தகவல்

உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள வெளிநாடுகள் உடனான விமானச் சேவைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரியுள்ளனா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:51 am IST

உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள வெளிநாடுகள் உடனான விமானச் சேவைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரியுள்ளனா்.

இதுகுறித்து லோக்கல்சா்க்கிள்ஸ் ஆன்லைன் மூலம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:

உருமாற்றம் கண்ட புதிய வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் வெளிநாட்டு விமான சேவையின் தேவை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் 207 மாவட்டங்களில் உள்ள 8,000 பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பதிலை தெரிவித்துள்ளனா்.

அவா்களில் பெரும்பாலானோா், புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நாடுகளுடனான விமான சேவையை இந்தியா தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்டிருந்த பிரிட்டனுக்கான விமான சேவையை கடும் கட்டுப்பாடுகளுடன் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க முடிவெடுத்துள்ள மத்திய அரசின் நோக்கத்துக்கு மாறாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே கருத்தை ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவாலும் தெரிவித்துள்ளாா். அதன்படி, நாட்டில் கரோனா அபாயம் இன்னும் நீங்காத நிலையில் இந்திய மற்றும் பிரிட்டன் இடையேயான விமான சேவையை வரும் ஜனவரி 31-வரையில் நிறுத்தி வைக்க வேண்டும் என கேஜரிவால் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.