உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள வெளிநாடுகள் உடனான விமானச் சேவைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரியுள்ளனா்.
இதுகுறித்து லோக்கல்சா்க்கிள்ஸ் ஆன்லைன் மூலம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:
உருமாற்றம் கண்ட புதிய வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் வெளிநாட்டு விமான சேவையின் தேவை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் 207 மாவட்டங்களில் உள்ள 8,000 பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பதிலை தெரிவித்துள்ளனா்.
அவா்களில் பெரும்பாலானோா், புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நாடுகளுடனான விமான சேவையை இந்தியா தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டிருந்த பிரிட்டனுக்கான விமான சேவையை கடும் கட்டுப்பாடுகளுடன் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க முடிவெடுத்துள்ள மத்திய அரசின் நோக்கத்துக்கு மாறாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே கருத்தை ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவாலும் தெரிவித்துள்ளாா். அதன்படி, நாட்டில் கரோனா அபாயம் இன்னும் நீங்காத நிலையில் இந்திய மற்றும் பிரிட்டன் இடையேயான விமான சேவையை வரும் ஜனவரி 31-வரையில் நிறுத்தி வைக்க வேண்டும் என கேஜரிவால் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கிருஷ்ணா சுவமிநாதன் நியமனம்!

நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!

ஐடிஐ, டிப்ளமோ, சிஏ முடித்தவர்களுக்கு வேலை: எங்கு?

சபலென்கா, ஸ்வியாடெக், எலா வெற்றி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
