பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைகேரள முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்! வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு! விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!
/

ஏர் இந்தியா விமானம் மூலம் தில்லிக்கு வந்த 4 பேருக்கு கரோனா தொற்று

ஏர் இந்தியா விமானம் மூலம் லண்டனிலிருந்து தில்லிக்கு வந்த நான்கு பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

News image

ஏர் இந்தியா விமானம்

Updated On :11 ஜனவரி 2021, 7:41 am

புது தில்லி: ஏர் இந்தியா விமானம் மூலம் லண்டனிலிருந்து தில்லிக்கு வந்த நான்கு பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு வரும் அனைத்து விமானச் சேவைகளும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 7 வரை மத்திய அரசால் நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கடந்த ஜன.8 முதல் மீண்டும் விமானச் சேவை தொடங்கியுள்ளதை அடுத்து, ஏர் இந்தியாவின் ஏஐ162 விமானம் ஞாயிறன்று இரவு 10.30 மணியளவில் 186 பயணிகளுடன் லண்டனிலிருந்து தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. 

தரையிறங்கிய அனைத்து பயணிகளுக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. அதில் நான்கு பேருக்கு கரோனா தொற்று இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.