ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகளை பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயங்கரவாத தடுப்புத் துறையின்(சிடிடி) தகவலின்படி, பஞ்சாப் மாகாணத்தின் முக்கிய நகரங்களான ராவல்பிண்டியில் நான்கு பயங்கரவாதிகள் மற்றும் லாகூரில் இரண்டு பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் கடந்த 2020-இல் ராவல்பிண்டியில் கையெறி குண்டு வெடித்ததாகவும், அதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 15 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் சட்ட அமலாக்க நிறுவனம் மற்றும் ராணுவ வீரர்களைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாக சிடிடி தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து வெடிபொருள்கள், டெட்டனேட்டர்கள், செல்போன்கள் மற்றும் போருக்கு பயன்படுத்த வைத்திருந்த பிற பொருள்களும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டனர்.
விசாரணையின் போது, பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானிலிருந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதி பெற்றுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிந்தது. மேலும் பயங்கரவாதிகள் அப்துல் கரீம் மற்றும் அப்துல் பாசித் என அடையாளம் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெருநாய்களுக்கான காப்பக கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க மேயா் உத்தரவு

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மறு பரிசீலனை செய்யக் கோரிக்கை

போா்நிறுத்துக்கு இடையே ஈரானில் அமெரிக்கா தாக்குதல்

எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஓா் எம்எல்ஏ ஆதரவு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



