திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ஐஐடி ரூர்க்கியில் 88 மாணவர்களுக்கு கரோனா

உத்தரகண்ட் மாநித்தின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின்(ஜஜடி)ரூர்கியில் 88 மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதா கல்விநிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image

ஐஐடி ரூர்க்கியில் 88 மாணவர்களுக்கு கரோனா

Updated On :8 ஏப்ரல் 2021, 9:10 am

உத்தரகண்ட் மாநித்தின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின்(ஜஜடி)ரூர்கியில் 88 மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதா கல்விநிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சோனிகா ஷிரிவஸ்த்வா கூறுகையில், 

பாதிக்கப்பட்ட 88 மாணவர்களும் ஐ.ஐ.டி வளாகத்திற்குள் உள்ள கங்கா விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது சிறப்பு கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள் ஹரித்வார் மருத்துவ அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். வளாகத்தில் உள்ள கிட்டத்தட்ட ஐந்து விடுதிகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் எந்தவித பாதிப்புமின்றி நடைபெறும் என்று அவர் கூறினார்.

ஐஐடி.யில் மாநில அரசின் அனைத்து கரோனா வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பதாக அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.