மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.
இதுபற்றி அவர் கூறியது:
"ராஜஸ்தான் மற்றும் குஜராத் இரண்டு மாநிலங்களிலும் கரோனா தொற்றின் தீவிரம் சமமாக உள்ளது. ஆனால், குஜராத்துக்கு 1,200 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானுக்கு 124 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன் வழங்காவிட்டால் உயிர்களை எப்படி காப்பாற்றுவது.
தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானுக்கு ஒருநாளைக்கு 7 லட்சம் கரோனா தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. பிரதமருக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கும் ராஜஸ்தான் அரசு கடிதம் எழுதியது. அதன்பிறகு, மாநிலத்துக்கு 14 லட்சம் தடுப்பூசிகள் கிடைத்தன. அவை இரண்டு நாள்களுக்குப் பயன்படுத்தப்படும்.
மாநிலத்திடம் முழு சேமிப்புத் திறனும் உள்ளது. 15 நாள்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும். அது பல்வேறு உயிர்களைக் காக்கும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான அனுமதியை வழங்கிட வேண்டும்."
ராஜஸ்தானில் கடந்த ஏப்ரல் 1 முதல் 18 வரை மட்டுமே 131 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுவே மார்ச் முழுவதிலும் வெறும் 31 பேர் மட்டுமே நோய்த் தொற்றுக்கு பலியாகியிருந்தனர்.
ராஜஸ்தானில் இதுவரை மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,14,617 ஆக உயர்ந்துள்ளது. 3,151 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கங்கை நதியில் மாசுபாடு குறைந்து வருகிறது: மத்திய அரசு

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ

பெண்ணின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


