மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வரும் வாரங்களில் கரோனாவின் கோரத் தாண்டவம் மிக மோசமாக இருக்கும்: மத்திய அரசு

நாட்டில் வரும் வாரங்களில் கரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும். அதனை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

News image
வரும் வாரங்களில் கரோனாவின் கோரத் தாண்டவம் மிக மோசமாக இருக்கும்: மத்திய அரசு
Updated On :24 ஏப்ரல் 2021, 8:54 am

DIN


புது தில்லி: நாட்டில் வரும் வாரங்களில் கரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும். அதனை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

மக்களை அச்சப்படுத்துவதற்காக இதனைக் கூறவில்லை. இது தான் நிதர்சனமான உண்மையாக உள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கில், தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் மத்திய  அரசு தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

கரோனாவால் நாட்டில் மிக மோசமான சூழல் உருவாகவிருக்கிறது. வரும் நாள்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக உயரும். மக்கள் அதனை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் நாட்டில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து தற்போது 24 மணி நேரத்துக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், வரும் வாரங்களில் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.