ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்ட வழக்கு: ஜம்மு காஷ்மீரில் அதிரடி சோதனை

பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்திவருகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 3:52 am

DIN

பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்திவருகிறது.

பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் 14 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்திவருகிறது. தடை செய்யப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களின் அலுவலகம் உள்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் நடைபெறும் மூன்றாவது சோதனை இதுவாகும். ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர், மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஆகியோர் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களுடன் இணைந்து தோடா, கிஷ்ட்வார், ரம்பன், அனந்த்நாக், புட்காம், ரஜோரி, தோடா, ஷோபியன் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர்.

2019ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துவருவதாக கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. எனவே, பயங்கரவாதத்தால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதை நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஜூலை 10ஆம் தேதி, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்ட வழக்கில் ஆறு பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.