அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தில்லி விமான நிலையத்திற்கு அல்கொய்தா பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல்

தில்லி விமான நிலையத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மாநில காவல்துறைக்கு இமெயில் வந்துள்ளது.

News image
கோப்புப் படம்.
Updated On :8 ஆகஸ்ட் 2021, 6:14 am

DIN

தில்லி விமான நிலையத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மாநில காவல்துறைக்கு இமெயில் வந்துள்ளது.

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மாநில காவல்துறைக்கு இமெயில் வந்துள்ளது.

இதுகுறித்து விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், "விசாரணைக்கு பிறகு, மிரட்டல் பொதுவாக விடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. எனவே, வெடிகுண்டு நிபுணர் குழு விமான நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளது.

இருப்பினும், எச்சரிக்கை விடுக்கப்பட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் என்ற தலைப்பில் இமெயில் ஒன்று வந்தது.

அதில், முகமத் ஜலால் என்ற கரன்பீர் சூரி மற்றும் அவரின் மனைவி ஷைலி சாரதா என்ற ஹசீனா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு வரவுள்ளனர். 1 முதல் 3 நாள்களுக்குள் வெடி குண்டு தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தது. வெடிகுண்டு மிரட்டல் குறித்து விமான சேவை கட்டுப்பாட்டு மையத்திற்கு விமான நிலைய காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.

வெடுகுண்டு மிரட்டல் குறித்து பாதுகாப்பு செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையம் விசாரணை நடத்தியது. அதில், இமெயிலில் குறிப்பிட்ட தகவல்கள் அடங்கிய அதே மிரட்டல் முன்னர் ஒரு முறை விடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இதையடுத்து, விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.