உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத்துறை மேம்படுத்தும் விதமாக அயோத்தி-தில்லி இடையே அதிவேக புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தில்லி மற்றும் அயோத்தி இடையேயான புல்லட் ரயில் சேவைக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு
புல்லட் ரயிலின் விரிவான திட்டத்தின்படி, தில்லி மற்றும் வாரணாசி இடையே ஆக்ரா-லக்னெள-பிரயாக்ராஜ் வழியாக மொத்தம் 941.5 கி.மீ. பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த புல்லட் ரயில் திட்டமானது மொத்தம் 670 கி.மீ தூரத்தை மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் அடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதையும் படிக்க | அட்லாண்டிக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 52 பேர் நிலை என்ன?
இந்தத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. லக்னெள -கோராக்பூர் புறவழிச்சாலையில் உள்ள ஸ்ரீ ராம் சந்திர விமான நிலையத்திற்கான நிலம் அடையாளம் காணப்பட்டு இறுதி செய்யப்பட்ட நிலையில் இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டவுடன் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 7 முதல் 8 ஆண்டுகளில் பயன்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.