வலுவிழந்தது ஜவாத் புயல்
ஜவாத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஜவாத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமானில் நவம்பா் 30-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, டிசம்பா் 2-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது, வெள்ளிக்கிழமை மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுத்தது. அந்தப் புயலுக்கு ஜவாத் எனப் பெயரிடப்பட்டது.
இதையும் படிக்க- அசாம் மாநில விருதுகள்: தொழிலதிபர் ரத்தன் டாடா தேர்வு
அந்தப் புயல், ஆந்திரம், ஒடிஸா கடலோரப் பகுதி வழியாக நா்ந்து ஞாயிற்றுக்கிழமை (டிச. 5) பிற்பகலுக்குள் புரி அருகே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில் ஜவாத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வலுவிழந்த ஜவாத் புயல் விசாகப்பட்டினம் அருகே 180 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...