ரே பரேலி: லக்கிம்பூர் கேரி வன்முறையை, ஜாலியன்வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிரிட்டீஷார் கூட முன்னாலிருந்துதான் சுட்டனர், ஆனால் பாஜக, பின்னாலிருந்து ஜீப்பை ஏற்றிக் கொன்றது என்று கூறியுள்ளார்.
சமாஜ்வாதி வெற்றி யாத்திரையின் ஒரு பகுதியாக, ரே பரேலி சென்றிருக்கும் அகிலேஷ் யாதவ், வரும் 2022ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது ஜீப்பை ஏற்றி படுகொலை நடந்துள்ளது. ஒரு முறை வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், நமக்கு ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவுக்கு வரும், அப்போது, முன்னால் நின்றுகொண்டு, பிரிட்டீஷார் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
ஆனால், பாஜகவோ, விவசாயிகளின் பின்னாலிருந்து ஜீப்பை மோதவிட்டுள்ளது. இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதலிடத்துக்கு முன்னேறுமா ஆர்சிபி? மழையினால் தாமதமாகும் போட்டி!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.71! 8 காசுகள் சரிவு!
நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் விஜய்
லோகேஷ் கனகராஜ் நாயகனாகும் டிசி பட டிரைலர் அறிவிப்பு!
விடியோக்கள்

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

