ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

பச்சைப் புடவையில் சசிகலா; ஒசூரில் வரவேற்பு வளையங்கள்

சொத்துக் குவிப்பில் சிறைத் தண்டனை முடிந்து சரியாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தமிழகம் திரும்புகிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா.

News image

பச்சைப் புடவையில் சசிகலா; ஒசூரில் வரவேற்பு வளையங்கள்

Updated On :8 பிப்ரவரி 2021, 10:37 am

PTI


கிருஷ்ணகிரி: சொத்துக் குவிப்பில் சிறைத் தண்டனை முடிந்து சரியாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தமிழகம் திரும்புகிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா.

Story image

பெங்களூருவில் தான் தங்கியிருந்த பண்ணை வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட சசிகலா, கர்நாடக - தமிழக எல்லைப் பகுதியாக கிருஷ்ணகிரியை காலை 10 மணிக்கு வந்தடைந்தார்.

கிருஷ்ணகிரி எல்லையில், அவருக்கு மேள, தாள வாத்தியங்கள் முழங்க, பூக்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில் சசிகலாவின் வருகை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 200  வாகனங்கள் புடை சூழ, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த பச்சை நிறப் புடவையில் சசிகலா தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

Story image

அவர் வரும் வழியில், அவரது காரில் இருந்த அதிமுக கொடியை காவல்துறையினர் அகற்றியதால், அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தில் ஏறி சசிகலா தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

அத்திப்பள்ளி எல்லைப் பகுதியில் அதிமுக மற்றும் அமமுக கொடிகளை கையில் ஏந்திய ஏராளமானோர் சசிகலாவை வரவேற்றனர். 

Story image

கிருஷ்ணகிரி மாவட்டமே இன்று விழாக் கோலம் பூண்டுள்ளது. சசிகலா பயணிக்கும் பாதை முழுக்க பேனர்களும், வரவேற்பு பலகைகளும், போஸ்டர்களும், அலங்கார வளைவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சாலைகளில், தலையில் கலசங்களுடன், பூங்கொத்து, பூமாலைகளுடன் ஏராளமான தொண்டர்கள் காத்திருப்பதையும் காண முடிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.