வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புகிறேன்: அஜித் பவார்

தேர்தலில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முழுமையாக நம்புவதாக மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் (கோப்புப்படம்)
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

தேர்தலில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முழுமையாக நம்புவதாக மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் இது தொடர்பாக பேசிய அவர், காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநில தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் வெற்றியின்போதும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 

தங்கள் கட்சி வெற்றியடையும்போது அமைதியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, தோற்றால் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பழிபோடுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை நான் முழுமையாக நம்புகிறேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com