திரிணமூல் எம்.பி. தினேஷ் திரிவேதி பதவி விலகல்
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்துள்ளார்.


மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறை மிகவும் வேதனை அளிப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக தமது பதவியை ராஜிநாமா செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தில் கடந்த சில நாள்களாக திரிணமூல் மற்றும் பாஜக தொண்டர்கள் மத்தியில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகளை உருவாக்கக் கோரி நேற்று தலைமைச் செயலகத்தை நோக்கி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.
அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...