மத்தியப் பிரதேச மாநிலத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் பலியாகியுள்ளனர்.
சீதீ மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் தவறி விழுந்துள்ளது.

முதற்கட்டமாக கரையிலிருந்த 7 பேரை உயிருடன் மீட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கால்வாயில் அடித்துச்செல்லப்பட்ட 30 பேரை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துளசிராம் சிலாவத் உறுதிப்படுத்தியுள்ளார்.
பன்சாகர் அணையிலிருந்து வெளிவரும் பிரதான கால்வாயில், சுமார் 30 அடி ஆழத்திலும் இருக்கும் ஷரதா கால்வாயில் பேருந்து விழுந்துள்ளது. எனவே, நீரில் பேருந்து முழுவதுமாக மூழ்கியுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ திவாரி கூறியுள்ளார்.
மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக கிரேன்கள் உள்ளிட்ட உபகரணங்கள் சம்பவ இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


