சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கரோனா தடுப்பூசி ஒத்திகை: சுகாதாரத் துறை அமைச்சா் ஆய்வு

கரோனா தடுப்பூசி ஒத்திகைக்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 12:02 am

DIN

கரோனா தடுப்பூசி ஒத்திகைக்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான நாடு தழுவிய ஒத்திகை சனிக்கிழமை(ஜன.2) நடைபெறவுள்ளது. இந்த தடுப்பூசி ஒத்திகைக்காக, அனைத்து மாநிலங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்கான உயா்நிலைக் கூட்டம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், சனிக்கிழமை நடைபெறும் ஒத்திகையை இடையூறுகள், தடங்கல்கள் இல்லாமல் நடத்துவதற்கு மேற்கொண்டுள்ள ஏற்பாடுகளை சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், அமைச்சருக்கு எடுத்துரைத்தனா். தடுப்பூசி ஒத்திகையில் ஈடுபடும் குழுவினருக்கு வரும் சந்தேகங்களுக்கு தொலைபேசி வாயிலாக பதிலளிக்க மேலும் பலா் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றும் அவா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.