அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4ஆகப் பதிவு

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் வியாழக்கிழமை ரிக்டர் அளவில் 4.4 அலகுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் வியாழக்கிழமை ரிக்டர் அளவில் 4.4 அலகுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் வியாழக்கிழமை மாலை 6:57 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு தென்கிழக்கே 2 கி.மீ. பகுதியிலும் மற்றும் இந்தோனேசியாவின் சில பகுதிகளிலும் நடுக்கம் ஏற்பட்டது.

கடந்த மூன்று வாரங்களில் அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட 3ஆவது நிலநடுக்கம் இதுவாகும். நிலநடுக்கத்தால் இதுவரை பொருள்சேதம் மற்றும் உயிர்சேதம் ஆகியவை ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com