பஞ்சாப் மாநிலத்தில் திருமண ஊர்வலத்தின்போது மணமகனுடன் திருமண வீட்டாரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமண ஊர்வலத்தின்போது போராட்டக் களத்தில் சிறிது நேரம் பங்கேற்று, பின்னர் திருமண வீட்டார் திருமண நிகழ்வைத் தொடர்ந்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஆதரவு பெறுகி வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் திருமண ஊர்வலத்தின்போது மணமகனுடன் திருமண வீட்டாரும் விவசாயிகளுடான போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாபில் வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் அரை மணிநேரம் பங்கேற்று பின்னர் திருமண நிகழ்வைத் தொடர்ந்தனர்.
இது தொடர்பாக பேசிய மணமகன் ஜெகதீப் சிங், ''நான் விவசாய குடும்பத்திலிருந்து வந்ததால், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்!

திமுக - காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு மகிழ்ச்சியளிக்கிறது: ப.சிதம்பரம்

காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!

அதிமுக கூட்டணியில் 3 தொகுதியை கேட்டுப் பெறுவோம்: பிவி. கதிரவன் நம்பிக்கை
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

