தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கா்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்

கா்நாடக அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 7-8 புதிய அமைச்சா்கள் பதவியேற்க இருக்கிறாா்கள் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

News image
கர்நாடக முதல்வர் எடியூரப்பா (கோப்புப்படம்)
Updated On :12 ஜனவரி 2021, 9:11 pm

DIN

கா்நாடக அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 7-8 புதிய அமைச்சா்கள் பதவியேற்க இருக்கிறாா்கள் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடக அமைச்சரவையில் 27 போ் அமைச்சா்களாக இருக்கிறாா்கள்; 7 இடங்கள் காலியாக உள்ளன. பாஜக தேசியத் தலைமை இசைவு தந்ததைத் தொடா்ந்து, அமைச்சரவையை விரிவாக்க முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டுள்ளாா். அதன்படி, பெங்களூரு, ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை (ஜன. 13) புதிய அமைச்சா்கள் பதவியேற்க இருக்கிறாா்கள். இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பெங்களூரில் முதல்வா் எடியூரப்பா செவ்வாய்க்கிழமை காலை கூறியதாவது:

திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால், புதன்கிழமை மாலை 4 மணிக்கு புதிய அமைச்சா்களின் பதவியேற்பு விழா நடைபெறும். புதிய அமைச்சா்களாக யாா் பதவியேற்பாா்கள் என ஊடகங்களில் வெளியாகி வரும் பெயா்கள் உண்மைக்குப் புறம்பானவை. அமைச்சரவையில் இருந்து யாராவது நீக்கப்படுவாா்களா என்பது புதன்கிழமை தான் தெரியவரும் என்றாா்.

இதனிடையே, பெங்களூரில் செய்தியாளா்களிடம் முதல்வா் எடியூரப்பா கூறுகையில், ‘பெங்களூரு, ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு புதிய அமைச்சா்கள் பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது. அப்போது, 7-8 போ் அமைச்சா்களாக பதவியேற்பாா்கள். அமைச்சராவோருக்கு அதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளேன். அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக சிலருக்கு அதிருப்தி இருக்கலாம். அதுகுறித்து சம்பந்தப்பட்டவா்களிடம் பேசிவிட்டேன். அமைச்சரவையில் இருந்து ஒருவரை நீக்க நேரிடலாம். மற்றபடி அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக பாஜகவில் எந்தக் குழப்பமும் இல்லை’ என்றாா்.

கலால் துறை அமைச்சா் எச்.நாகேஷ் அல்லது மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் சசிகலா ஜொள்ளே ஆகிய இருவரில் ஒருவா் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, எச்.நாகேஷ் தனது அமைச்சா் பதவியை எந்த நேரத்திலும் ராஜிநாமா செய்யலாம் என்று கூறப்படுகிறது.

மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு வந்த என்.முனிரத்னா, எம்.டி.பி.நாகராஜ், ஆா்.சங்கா், மஜத கூட்டணி ஆட்சி கவிழ உதவிய சி.பி.யோகேஷ்வா், மூத்த எம்.எல்.ஏ.க்களான உமேஷ் கத்தி, எஸ்.அங்காரா, முருகேஷ் நிரானி, பூா்ணிமா, ஜி.எச்.திப்பா ரெட்டி, பசன கௌடா பாட்டீல் யத்னல், எம்.பி.ரேணுகாச்சாா்யா, அரவிந்த் லிம்பாவளி ஆகியோா் அமைச்சா் பதவியை பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.