சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் அலட்சியப் போக்கு: உ.பி. அரசு மீது பிரியங்கா குற்றச்சாட்டு

பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் உத்தர பிரதேச மாநில அரசு அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளரான பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினார்.

News image
பிரியங்கா காந்தி(கோப்புப்படம்)
Updated On :13 ஜனவரி 2021, 11:10 pm

DIN

புது தில்லி: பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் உத்தர பிரதேச மாநில அரசு அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளரான பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினார்.
அண்மையில் கோரக்பூரில் 12 பெண்கள் உயிரிழந்ததாக வெளியான ஊடக செய்திகளை மேற்கோள் காட்டி, முகநூலில் அவர் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: 
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசின் பெண்களுக்கு ஆதரவான முழக்கங்கள் வெற்று முழக்கங்கள்.
மகளிர் பாதுகாப்புக்காக "மிஷன் சக்தி' என்ற பெயரில் விளம்பரங்களுக்காக அரசு கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. அதேநேரம், அடித்தட்டு பெண்கள் விவகாரத்தில் அலட்சிய மனப்பான்மையைக் கொண்டுள்ளது. சில வழக்குகளில் உயிரிழந்த பெண்களை அடையாளம் காணக்கூட காவல் துறையினரால் முடியவில்லை.
மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நாள்தோறும் சராசரியாக 165 குற்றங்கள் நிகழ்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையங்களில் புகார் அளிக்கும்போது மோசமான பேச்சுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அனுதாபத்துக்குப் பதிலாக அந்தப் பெண்ணுக்கு அவமரியாதை செய்யப்படுகிறது.
ஹாத்ரஸ், உன்னாவ், பதாயுன் போன்ற சம்பவங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசின்அணுகுமுறையை ஒட்டுமொத்த தேசமும் பார்த்தது.
பெண்களின் பாதுகாப்பைப் பற்றிய அடிப்படைப் புரிதலில் பெண்ணின் குரலே முதன்மையானது. ஆனால், மாநில அரசோ எப்போதும் இதற்கு நேர்மாறாக செயல்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவரது குடும்பத்தினர் குரல் எழுப்பும்போது அவர்கள் மீது ஆளும் கட்சியினர் மோசமான கருத்துகளைத் தெரிவிப்பதைப்போன்ற வெறுக்கத்தக்க செயல் வேறு எதுவும் இல்லை.
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முதன்மையானது அவர்களுக்கு எதிரான குற்றங்களை வெளிக்கொணர்வதாகும். இதற்காக பெண்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.