இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உச்சநீதிமன்றக் குழுவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை: விவசாய சங்கங்கள்

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவுடனான முதல் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

News image
உச்சநீதிமன்றக் குழுவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை: விவசாய சங்கங்கள்
Updated On :19 ஜனவரி 2021, 9:58 am

DIN

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவுடனான முதல் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 50 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் தலைநகர் தில்லியில் போராடி வருகின்றனர். 

தொடர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டங்கள் தொடா்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து, விவசாயிகள் எழுப்பி வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக 4 பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற குழுவுடன் நடைபெற உள்ள முதல் கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்கப் போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கிட்  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் யாரும் உச்சநீதிமன்றத்தை அணுகவில்லை என்றும் மத்திய அரசே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.