தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தில்லி விவசாயிகள் பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு ஆம் ஆத்மி கண்டனம்

தில்லி போராட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையை வன்மையாக கண்டிப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. 

News image
Updated On :26 ஜனவரி 2021, 12:15 pm

DIN

தில்லி போராட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையை வன்மையாக கண்டிப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர். லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டுள்ள இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. 

அனுமதி கொடுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து வேறு வழிகளில் விவசாயிகள் சென்றதால் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் பேரணியை காவல்துறை தடுத்து வருகிறது. காவல்துறை கட்டுப்பாடுகளை மீறி விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டனர். இதனால் தில்லி முழுவதும் வன்முறைக் களமாக காட்சி அளிக்கிறது. தில்லியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 

தில்லியில் நடைபெற்ற வன்முறைக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி, 'இன்று வன்முறையில் ஈடுபடுபவர்கள் விவசாய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. மிகவும் அமைதியாகவும் ஒழுக்கமாகவும் நடந்து கொண்டிருந்த இயக்கத்தை அவர்கள் பலவீனப்படுத்தியுள்ளனர்.

இன்றைய போராட்டத்தில் காணப்பட்ட வன்முறையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். நிலைமை இவ்வளவு மோசமாக மோசமடைய மத்திய அரசு அனுமதித்தது வருந்தத்தக்கது. இந்த இயக்கம் கடந்த இரண்டு மாதங்களாக அமைதியான முறையில் நடைபெற்றது' என்று தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.