மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் பலி 

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். அவர்களின் மரணங்களுக்கான காரணங்களை மருத்துவ நிபுணர் குழு ஆராய முடிவு செய்துள்ளது.

News image
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் பலி
Updated On :30 ஜனவரி 2021, 7:12 am

DIN


புது தில்லி: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். அவர்களின் மரணங்களுக்கான காரணங்களை மருத்துவ நிபுணர் குழு ஆராய முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 28 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு 1 முதல் 5 நாள்களுக்குள் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு உயிரிழந்த மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் 25 முதல் 56 வயதுக்குள்பட்டவர்களாகவே உள்ளனர்.

உயிரிழந்த அனைவருக்கும் உடற்கூராய்வு செய்யப்பட்டு, அவர்களது மரணத்துக்கு சரியான காரணம் கண்டறியப்பட்டுளள்தாக தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்டறியும் ஆணையத்தின் ஆலோசகர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.

மேலும், முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இந்த மரணங்கள் நிகழவில்லை என்று தெரிய வந்துள்ளது. ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு உயிரிழந்தவர்களின் மரணங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஆய்வில் கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.